×

திசையன்விளை அருகே கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு

திசையன்விளை, பிப்.1: திசையன்விளை அருகே நாடார் அச்சம்பாட்டில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் பரிசு தொகை மற்றும் கோப்பை வழங்கினார்.
நாடார் அச்சம்பாடு நண்பர்கள் குழு சார்பில் நடந்த கிரிக்கெட் போட்டியில் முதல் பரிசு பெற்ற மணலிவிளை அணிக்கு மாவட்ட பஞ். தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் பரிசு தொகை 10 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கினார். 2ம் இடம் பெற்ற நாடார் அச்சம்பாடு அணிக்கு ரூ.8 ஆயிரம் முன்னாள் லயன்ஸ் கவர்னர் சுயம்புராஜன் வழங்கினார். 3ம் இடம் பெற்ற இடைச்சிவிளை அணிக்கு 5 ஆயிரம் குமாரபுரம் ஊராட்சி தலைவர் அனிதா பிரின்ஸ் வழங்கினார். 4ம் இடம் பெற்ற மெஞ்ஞானபுரம் அணிக்கு ரூ.2 ஆயிரம் திமுக விவசாய அணி அமைப்பாளர் முத்து செல்வக்குமார் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் நாகமணி, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் அலெக்ஸ், சில்வெஸ்டர், முன்னாள் மாவட்ட பிரதிநிதிகள் ரமேஷ், ராஜசேகர், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் ஜெயசங்கர், கண்ணன், திசையன்விளை இலக்கிய அணி அமைப்பாளர் நடராஜன், ரெத்தினபாண்டி, அருண் வெங்கடேஷ், ராஜா வசந்தகுமார், மகாராஜன், முத்து, காமில், புளியடிகுமார், எழில், ஜோசப், முத்தையா, சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thissayanvilai ,
× RELATED திசையன்விளை அருகே மின்கம்பி அறுந்து விழுந்து சிறுமி பலி