×

துவாக்குடி நகராட்சி தேர்தல் திமுக உள்பட 5 பேர் வேட்பு மனு


திருவெறும்பூர், பிப்.1: திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலையொட்டி நேற்று திமுகவை சேர்ந்த 3 பேர் உட்பட 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சி வார்டுகளுக்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த 28ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நேற்று திமுக சார்பில் 12வது வார்டுக்கு ஒருவரும், 6வது வார்டுக்கு ஒருவரும், 7வது வார்டுக்கு ஒருவரும் என 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதேபோல் 11வது வார்டுக்கு பெண் ஒருவரும், 5வது வார்டுக்கு பெண் ஒருவரும் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை துவாக்குடி நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு தற்போது 4 பெண்கள் உள்பட 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags : DMK ,Tuvakkudi Municipal Election ,
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்