×

புதுகை அருகே கீரனூரில் மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்

புதுக்கோட்டை, பிப்.1: புதுகை அடுத்த கீரனூரில் ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள அரசு செய்துள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் நேற்று கீரனூரில் ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கீரனூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கடையில் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் இருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மரிய வினோத்குமார் (32), விஜய்சிங்( 40) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Gutka ,Keeranur ,Pudukai ,
× RELATED குட்கா பதுக்கி விற்ற கடைக்காரர் கைது