×

அஞ்செட்டி அருகே சாலையில் நின்ற ஒற்றை யானை

தேன்கனிக்கோட்டை: அஞ்செட்டி அருகே சாலையில் நின்ற ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர். அஞ்செட்டி வனப்பகுதியில் யானைகள், காட்டு எருமைகள், கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்கள் உள்ளன. அடிக்கடி யானைகள் உணவு, தண்ணீர் தேடி கூட்டமாகவும், தனியாகவும் சாலையை கடந்து செல்வது வழக்கம், நேற்று முன்தினம் இரவு, அஞ்செட்டி அருகே ஒகேனக்கல் செல்லும் சாலையில் நடுவே ஒற்றை யானை ஒன்று நீண்ட நேரம் நின்று கொண்டு இருந்தது. அச்சாலையில் வாகனங்களில் செல்வோர் பீதியடைந்தனர். யானை சாலையில் நின்று கொண்டிருந்ததால், போக்கு வரத்து பாதித்தது. நீண்ட நேரத்திற்கு பிறகு யானை தானாக காட்டிற்குள் சென்று மறைந்ததால் நிம்மதி அடைந்தனர்.

Tags : Anchetti ,
× RELATED வத்தல்மலை அடிவாரத்தில்...