×

அஞ்செட்டி அருகே சுவாமி தரிசனத்திற்கு அனுமதி மறுப்பு

தேன்கனிக்கோட்டை: அஞ்செட்டி அருகே நூரொந்து சாமி மலை கோயில் உள்ளது. தை அமாவாசையை முன்னிட்டு நேற்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்கு சென்றனர். ஆனால், கோயில் நிர்வாகம் பக்தர்கள் பூஜை செய்ய அனுமதி வழங்காமல், கேட்டை இழுத்து மூடி வெளியேற்றி விட்டது. இதுதொடர்பாக அஞ்செட்டி காவல்நிலையத்தில் பக்தர்கள் புகார் தெரிவித்தனர். அதில், கோயிலுக்கு தனி நபர்கள் உரிமை கோருவதை ஏற்க முடியாது. நூரொந்து சாமி சித்தருக்கு மைசூரு மகாராஜா பல கோடி ரூபாய் மதிப்பிலான வைரமாலை வழங்கியதாக தகவல் உள்ளது. இந்த மாலை குறித்து தற்போது வரை எந்த தகவலும் இல்லை. மார்ச் மாதம் நடக்கும் கும்பாபிஷேக விழாவிற்கு தமிழ் தவிர்த்து கன்னட மொழியில் நோட்டீஸ் அச்சடித்துள்ளனர். இதுகுறித்து கேட்டால் சரியான பதில் இல்லை. தனி நபர்கள் கோயில் சொத்துக்களை சுரண்டி வருகின்றனர். எனவே, உரிய நடவடிக்கை எடுத்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags : Swami Darshan ,Anchetti ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 6 மணி...