×

தை அமாவாசையையொட்டி அபிராமி அம்மனுக்கு பால் அபிஷேகம்

தரங்கம்பாடி, பிப்.1: மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் அபிராமி அம்மன் உடனுறை அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் தை அமாவாசையையொட்டி 14ம் ஆண்டு பாலாபிஷேகம் அபிராமி அம்மனுக்கு நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் அபிஷேகத்திற்கு பால்குடம் எடுத்து வந்தனர். திருக்கடையூரில் புகழ்பெற்ற அருள்மிகு அபிராமி அம்மன் உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் தை அமாவாசை அன்று அபிராமி அம்மனுக்கு பக்தர்கள் எடுத்து வரும் பாலை கொண்டு பாலாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். நேற்று 14வது ஆண்டு பாலாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பாலாபிஷேகத்திற்கு ஏராளமான பெண்கள் ஆனைக்குளத்திலிருந்து பால் குடம் எடுத்து வந்து அபிஷேகத்திற்கு கொடுத்தனர். அபிராமி அம்மனுக்கு பாலாபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்யபட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கட்டது.

Tags : Goddess ,Abrami ,Thai New Moon ,
× RELATED திருமலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில்...