×

வந்தவாசியில் காயத்துடன் மயங்கி கிடந்த மயிலுக்கு சிகிச்சை

வந்தவாசி, பிப்.1; வந்தவாசியில் மயங்கிய நிலையில் கிடந்த மயிலை வனத்துறையினர் மீட்டு காட்டில் விட்டனர். வந்தவாசி புதிய பஸ் நிலையம் பின் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் ஆண் மயில் காயமடைந்து மயங்கிய நிலையில் கிடப்பதாக நேற்று அவ்வழியாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்த முதியவர் வந்தவாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் மயங்கிய நிலையில் கிடந்த மயிலை பிடித்து வந்தவாசி கால்நடை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளித்த பின்னர் ஆரணி வனத்துறையினரிடம் மயிலை ஒப்படைத்தனர். வனத்துறையினர் தொடர் சிகிச்சைக்காக காயமடைந்த மயிலை ஆரணிக்கு கொண்டு சென்றனர்.

Tags : Vandavasi ,
× RELATED நெல் கொள்முதல் செய்வதற்கு விலை...