×

கரூர் பொன்நகர் சந்திப்பு பகுதியில் நிழற்குடை அமைக்க வேண்டும்

கரூர், ஜன. 31: கரூர் நகரப்பகுதியில் இருந்து திண்டுக்கல், ஈநசத்தம், பாகநத்தம், பைபாஸ் சாலை போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் ராயனூர் பொன்நகர் வழியாக செல்கின்றன. மேலும், பொன்நகர் பகுதியில் இருந்து தாந்தோணிமலை, ஒத்தையூர், பால்வார்பட்டி, கரூர் போன்ற பகுதிகளுக்கு சாலை செல்கிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் பொன்நகர் சந்திப்பு பகுதியில் அதிகளவு பயணிகள் பஸ்சிற்காக காத்திருக்கும் போது வெயிலில் நின்று ஏறிச் செல்கின்றனர். பயணிகள் நின்று செல்லும் வகையில் இந்த பகுதியில் நிழற்குடை வசதி இல்லை.  இதனால், பயணிகள் அனைவரும் கடும் அவதியில் உள்ளனர்.எனவே, பயணிகள் நலன் கருதி பொன் நகர் சந்திப்பு பகுதியில் நவீன நிழற்குடை அமைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Karur Ponnagar junction ,
× RELATED கடனுதவி வழங்க விவசாயிகள் கோரிக்கை...