×

ஆண்டிமடம் அருகே விபத்து டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பெண் பலி

ஆண்டிமடம், ஜன.31: ஆண்டிமடம் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பெண் பலியானார். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே ஓலையூர் கிராமம் பாக்கியம் நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் அபிராஜ் (20) இவர் அதே ஊரைச் சேர்ந்த தனது சித்தி உறவான பூமாலை மனைவி ரஞ்சிதா (36) மற்றும் அவரது மகன் சித்தார்த் (7) ஆகிய மூவரும் பைக்கில் வந்தனர். ைபக்கை அபிராஜ் ஓட்டி வந்தார். ஓலையூரிலிருந்து ஆண்டிமடம்-விருத்தாச்சலம் மெயின் ரோட்டிற்கு வருவதற்காக வழுதுடையான் கிராமம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது அதே ரோட்டில் முன்னால் சென்று கொண்டிருந்த கரும்பு லோடு ஏற்றிச் சென்ற டிராக்டர் டிரைவர் அஜாக்கிரதையாக பின்னால் வரும் வாகனத்தை கவனிக்காமல் சட்டென திரும்பியதால் அபிராஜ் மற்றும் ரஞ்சிதா, சித்தார்த் ஆகிய மூவரும் தவறி கீழே விழுந்ததில் ரஞ்சிதா டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தை சித்தார்த் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரஞ்சிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த ரஞ்சிதாவின் மகன் சித்தார்த் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். மேலும் இதுகுறித்து டிராக்டர் டிரைவர் கிளிமங்கலம் மேற்கு தெருவை சேர்ந்த வரதராஜன் மகன் சதீஷ்குமார் (25) என்பவரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

Tags : Andimadam ,
× RELATED அரியலூர் அருகே போட்டோவில் இருந்த தாலியை திருடியவர் கைது