×

திருவையாறு அருகே 2 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சேதம்

திருவையாறு, ஜன.31: திருவையாறு அடுத்த கல்யாணபுரம் 1-ம் சேத்தி ஊராட்சி மனுநீதிபேட்டை கிராமத்தில் வசித்து வரும் கணபதி, சதீஷ் ஆகியோரின் குடிசை வீடு நேற்று எதிர்பாரதவிதமாக தீயில் எரிந்து சேதமானது. இதில் வீட்டிலிருந்த துணிமணிகள், பாத்திரங்கள் ஆகியவை எரிந்து சேதமானது. உடனடியாக தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த திருவையாறு தீயணைப்பு நிலைய வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். தகவல் அறிந்த திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், திருவையாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி அரசு நிவாரணம் தலா ரூ.5 ஆயிரம் பணம், வேட்டி, புடவை, அரிசி, மண்ணெண்ணை ஆகியவற்றை வழங்கினார். ஊராட்சி மன்றத்தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர், வருவாய் ஆய்வர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Thiruvaiyaru ,
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் 4,021...