×

செய்யாறு அருகே திருவிழாவில் எஸ்ஐயை கல்லால் தாக்கியவர் கைது

செய்யாறு, ஜன.31: செய்யாறு அருகே திருவிழாவில் போலீஸ் எஸ்ஐயை கல்லால் தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த பிரம்மதேசம் போலீஸ் எஸ்ஐ விஜயகுமார் மற்றும் போலீஸ்காரர் ஐயப்பன் ஆகியோர் கடந்த 28ம் தேதி மாலை தென்னம்பட்டு கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த கிராமத்தில் நடந்த திருவிழாவில் அதிகளவு கூட்டம் இருப்பதை கண்டனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார், கொரோனா காலத்தில் கூட்டமாக இருக்கக்கூடாது, அனைவரும் கலைந்து செல்லுங்கள்’ என கூறினர். அப்போது அங்கிருந்த அதே கிராமத்தை சேர்ந்த வினோத்குமார்(22) என்பவர், போலீசாரை ஆபாசமாக பேசி அவர்கள் மீது கற்களை வீசியுள்ளார். இதில் எஸ்ஐ விஜயகுமார் படுகாயம் அடைந்தார். அவரை போலீஸ்காரர் ஐயப்பன் மற்றும் பொதுமக்கள் மீட்டு வெம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Seiyaru ,
× RELATED செய்யாறு அருகே அரசு...