×

எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலையில் அமமுகவினர் 50 பேர் அதிமுகவில் இணைந்தனர் ஏரல், ஜன.31: பண்டார

விளையில் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலையில் அமமுகவினர் 50 பேர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். தூத்துக்குடி நகராட்சி முன்னாள் தலைவரும், அமமுக மாநில அமைப்புச் செயலாளருமான ஹென்றிதாமஸ் தலைமையில் கட்சியினர் 2நாட்களுக்கு முன்பு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்நிலையில் நேற்று காலை ஹென்றிதாமஸ், பண்டாரவிளையில் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதனை அவரது வீட்டில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அவருடன் பேரவை இணை செயலாளர் ராமச்சந்திரன், வார்டு செயலாளர்கள் சக்திவேல், சாமிநாதன், பொன்சிங், சம்பத், ராஜன், அரிராம், மகளிரணி இணை செயலாளர் அமுதா, ஜெ.பேரவை அருண்குமார் மற்றும் செல்வராஜ் உட்பட 50 பேர் அமமுக கட்சியில் இருந்து விலகி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியின் போது வைகுண்டம் ஒன்றிய செயலாளர்கள் கிழக்கு அழகேசன், மேற்கு காசிராஜன், வர்த்தக அணி மாவட்ட தலைவர் திருத்துவசிங், ஜெ. ஒன்றிய பேரவை செயலாளர் பாஸ்கர், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் பால்துரை, பண்டாரவிளை பெருமாள், மங்கலகுறிச்சி சண்முகவேல், ஆறுமுகமங்கலம் ராஜா உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags : AIADMK ,SP ,Shanmuganathan Earl ,Bandara ,
× RELATED போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற...