×

ஆண்டிபட்டியில் காவல்நிலையம் முற்றுகை

ஆண்டிபட்டி:  ஆண்டிபட்டி அருகே உள்ள ரெங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (37). இவர், எரதிமக்காள்பட்டியில் ஓட்டல் நடத்தி வந்தார். இவருக்கு மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த 26ம் தேதி ஆண்டிபட்டியில் இருந்து தேனி சாலையில் வேல்முருகன் டூவீலரில் சென்றபோது, சக்கம்பட்டி பகுதி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். ஆண்டிபட்டி போலீசார் அவரை மீட்டு, சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை வேல்முருகன் இறந்தார். இந்நிலையில், ரெங்கசமுத்திரம் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் ஆண்டிபட்டி காவல்நிலையத்தை நேற்று மதியம் முற்றுகையிட்டனர். அப்போது விபத்து ஏற்படுத்தியவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்றனர். இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, ‘விபத்து ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Andipatti ,station ,
× RELATED ‘தானேனானன்னா னானா… ஆ…’ அதிமுக...