×

ராஜேந்திரம் பகுதி மக்கள் வீட்டுமனை பட்டா கோரி ஆர்டிஓவிடம் மனு

குளித்தலை, ஜன.29: குளித்தலை அடுத்த ராஜேந்திரம் ஊராட்சி பகுதி மக்கள் சார்பில் ஆர்டிஓ புஷ்பா தேவியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார் அதில் குறிப்பிட்டுள்ளதாவது கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த ராஜேந்திரம் பகுதி மக்கள் இலவச வீட்டு மனை பட்டா நிலம் கோரிய மனு மீதான மேல் நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வருக்கு மனு கொடுத்திருக்கிறோம் குளித்தலை வட்டம் ராஜேந்தி ரம் ஊராட்சி தண்ணீர் பள்ளி கிழக்கு திசையில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும் என மனு அளித்துள்ளோம். அந்த மனு மீதான நடவடிக்கை எடுத்து மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags : RTO ,
× RELATED அனைத்து பஸ்கள் நின்று செல்ல ஆர்டிஓ உத்தரவு