×

ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்

தர்மபுரி, ஜன.29: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில், 2வது மாநில பிரதிநிதித்துவ பேரவை கூட்டம், மாநில தலைவர் ராமமூர்த்தி தலைமையில் தர்மபுரியில் நேற்று நடந்தது. இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மீது தீர்வு காண வேண்டும். பணி ஓய்வு பெறும் நாளில், தற்காலிக பணி நீக்கம் செய்யக்கூடாது. தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் மாநில தலைவர் சுப்ரமணியன், முறையாக ஓய்வு பெற அனுமதிக்க வேண்டும்.

70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிய மருத்துவக்காப்பீடு திட்டத்தில் உள்ள முரண்பாடுகளை களைந்து, காப்பீடு திட்டத்தை அரசே நடத்த வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 37 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், பரமேஸ்வரன், ஆறுமுகம், சுப்ரமணியம், பழனியம்மாள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Pensioners' Association ,
× RELATED ஓய்வூதியர்கள் சங்க பேரவை கூட்டம்