×

அருப்புக்கோட்டையில் 7 பதற்றமான வாக்குசாவடிகள்

அருப்புக்கோட்டை, ஜன. 29: உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டுகளில் ஆண் வாக்காளர்கள் 36 ஆயிரத்தி 676 பேரும், பெண் வாக்காளர்கள் 38 ஆயிரத்தி 987 பேரும், இதர 7 பேரும் என மொத்தம் 75 ஆயிரத்தி 670 பேர் உள்ளனர். மொத்த வாக்குசாவடிகள் 87. ஆண்களுக்கான வாக்குசாவடிகள் 37ம், பெண்களுக்கான வாக்குசாவடிகள் 37ம், ஆண், பெண் இருபாலாருக்கு சேர்த்து 13ம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக மதுரை ரோடு, நெசவாளர் காலனி, நகராட்சி தொடக்கப்பள்ளி உள்ள வாக்குசாவடிகள், அல்-அமீன் முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி வாக்குசாவடிகள், சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி,

காந்தி மைதானம், டெலிபோன் ரோடு டவுண் தேவாங்கர் நடுநிலைப்பள்ளி, பந்தல்குடி ரோடு சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி, வெள்ளக்கோட்டை செங்குந்தர் தொடக்கப்பள்ளி, ஆகிய வாக்குசாவடிகளில் உள்ள 7 மையங்கள் பதற்றமான வாக்குசாவடியாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிக்கு பறக்கும்படையாக விருது நகர் தனித்துணைத்தாசில்தார் திருப்பதி தலைமையிலும், விருதுநகர் துணை வட்டாட்சியர் கனிமம் திருக்கண்ணமுனியாண்டி, விருதுநகர் மண்டல துணை வட்டாட்சியர் முத்து பாண்டீஸ்வரி ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

Tags : Aruppukottai ,
× RELATED மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா அருப்புக்கோட்டையில் இன்று அன்னதானம்