×

தேவகோட்டை அருகே தீக்குளித்து பெண் தற்கொலை

தேவகோட்டை, ஜன. 29: தேவகோட்டை அருகே வெளிமுத்தி கிராமத்தை சேர்ந்த பாண்டி மனைவி சுதா (29). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த ஜன.5ம் தேதி இரவு வீட்டில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி சுதா நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Devakottai ,
× RELATED தேவகோட்டையில் 1500 மதுபாட்டில்கள் பறிமுதல்