×

திருவையாறு அருகே மதுபானம் விற்றவர் கைது

திருவையாறு, ஜன.28: திருவையாறு அடுத்த நாகத்தியை சேர்ந்த முருகையன் மகன் மணிகண்டன்(28). இவர் சம்பவத்தன்று நாகத்தி காளியம்மன் கோவில் தெரு அருகே மதுபாட்டில்களை வைத்துக் கொண்டு விற்றுக் கொண்டிருப்பதாக தகவல் வந்தது. அதன்பேரில நடுக்காவேரி சப்இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டனை பிடித்து அவா; வைத்திருந்த 78 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டுவந்து வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thiruvaiyaru ,
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா