நெல்லை, ஜன.28: நெல்லை, தென்காசி மாவட்டங்களின் அங்கீகாரம் பெற்ற விற்பனை நிறுவனமான சுசீ ஹூண்டாயின் புதிய கிளை ஷோரூம், சர்வீஸ் சென்டர் சங்கரன்கோவிலில் திருவேங்கடம் மெயின் ரோட்டில் தாலுகா அலுவலகம் எதிரில் நேற்று திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு சுசீ குழுமத்தின் நிர்வாக இயக்குநர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். குழுமத்தின் செயல் இயக்குநர் ஆரெம்.கே. ராமநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற சங்கரன்கோவில் டிஎஸ்பி ஜாஹிர் ஹூசேன், பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் கோகுல் பிரதீப் ஆகியோர் ஷோரூமை திறந்து வைத்தனர்.
ஏற்பாடுகளை சுசீ ஹூண்டாய் நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் தியோடர், உதவி விற்பனை மேலாளர் ராம்சங்கர், ஊரக விற்பனை மேலாளர் ராமமூர்த்தி தலைமையில் சுசீ ஹூண்டாய் சங்கரன்கோவில் ஊழியர்கள் தர்மராஜ், சந்திரகுமார், ராஜ், உதயகுமார் ஆகியோர் செய்திருந்தனர். கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்த துவக்க விழாவில் நிர்வாகிகள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். சங்கரன்கோவிலில் ஹூண்டாய் வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேக சர்வீஸ் சென்டரும் ேநற்று முதல் செயல்படத் துவங்கியுள்ளது. சுசீ ஹூண்டாய் நெல்லை, தென்காசி, வள்ளியூர், அம்பையில் தனது ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டர்களை இயக்கி வருகிறது குறிப்
பிடத்தக்கது.