×

(தி.மலை) மின் வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை மின் மாற்றியை சீரமைக்க வலியுறுத்தி

திருவண்ணாமலை, ஜன.26: திருவண்ணாமலை அருகே பழுதடைந்த மின் மாற்றியை சீரமைக்க வலியுறுத்தி மின் வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். திருவண்ணாமலை அடுத்த மல்லவாடி அருகே உள்ள ஈச்சங்குப்பம் கிராமத்தில் சுமார் 2 மாதங்களாக மின்மாற்றி பழுதடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை விவசாயிகள் முறையிட்டனர். ஆனால் சீரமைக்கப்படாமல் காலம் கடந்தி வந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பன்னீர் செல்வம் தலைமையில் பழுதடைந்துள்ள மின் மாற்றியை உடனடியாக சீரமைக்கக்கோரி நேற்று மல்லவாடி கிராமத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்ைத முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக பழுதடைந்த மின் மாற்றியை சீரமைக்கப்படும் என உறுதியளித்ததை ெதாடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் மின் மாற்றி சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். விவசாயிகள் முற்றுகை போராட்டத்தை தொடர்ந்து உடனடியாக மின்மாற்றி சீரமைக்கப்பட்டது.

Tags : T.Malai ,Electricity Board ,
× RELATED பெரம்பலூரில் மின்கம்பிகளை உரசிய மரக்கிளைகளை அகற்றும் பணி