×

திருப்புத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் 11 பேர் காயம்

திருப்புத்தூர்:  திருப்புத்தூர் அருகே பூலாங்குறிச்சியில் நேற்று நடந்த வடமாடு மஞ்சுவிரட்டில் 11 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. திருப்புத்தூர் பூலாங்குறிச்சி சுள்ளாம்பட்டியில் நேற்று வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 16 மாடுகள் பங்கேற்றன. ஒரு மாட்டிற்கு 9 வீரர்கள் களத்தில் இறங்கி மாட்டை பிடித்தனர். ஒரு மாட்டை பிடிப்பதற்கு 25 நிமிடங்கள் வழங்கப்பட்டன.

இதில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், மாட்டின் உரிமையாளர்களுக்கும் அண்டா, குக்கர், சைக்கிள், ஏர் கூலர் உள்ளிட்ட பல பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மஞ்சு விரட்டில் காளைகளை பிடிக்கும் போது 11 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு தனியார் மருத்துவமனை சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 2 பேர் மேல் சிகிச்சைகாக பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மஞ்சுவிரட்டைக்காண சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

Tags : Manchurian ,Tiruputhur ,
× RELATED கொடைக்கானல் மஞ்சூர் வனப்பகுதியில்...