×

கலெக்டர் ஆபீசில் வாலிபர் தர்ணா

மதுரை: மதுரை வண்டியூர் பிகேஎம் நகரை சேர்ந்தவர் கண்ணதாசன் (38). இவரது மனைவி பிரபாதேவி. ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2 வருடத்திற்கு முன்பு குடும்ப தகராறில் கோபித்து கொண்டு பிரபாதேவி, திருமங்கலத்திலுள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். கண்ணதாசன் பலமுறை வீட்டிற்கு அழைத்த போதும் அவர் வர மறுத்து விட்டதாக தெரிகிறது. மேலும் கண்ணதாசனுடன் வாழ மறுத்து பிரபாதேவி திருமங்கலம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு விசாரணை தற்போது ஆன்லைனில் நடந்து வருகிறது. அதன்பின்பு மீண்டும் கண்ணதாசன், திருமங்கலத்தில் உள்ள மாமானார் வீட்டிற்கு சென்று தனது குழந்தைகள், மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த அவர்கள், கண்ணதாசனை அடித்து உதைத்து காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த கண்ணதாசன் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு தனது மனைவி, குழந்தைகளை தன்னுடன் சேர்த்து வைக்க கோரிய பதாகையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்பு அவர் இரவு வீடு திரும்பினார்.

Tags : Walipar Tarna ,Office ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...