×

டாஸ்மாக் கேட்டை உடைத்த 2 பேர் கைது

சத்தியமங்கலம்:  பவானிசாகர் அருகே தொட்டம்பாளையத்தில் டாஸ்மாக் கடை உள்ளது.  நேற்று காலை டாஸ்மாக் கடையின் முன்புறம் உள்ள கேட் மற்றும் தகர சீட்டினால் ஆன கதவு சேதப்படுத்தப்பட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. தகவல் அறிந்த பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் 2 பைக்குகளில் வந்த தொட்டம்பாளையத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் (29), ராஜ்குமார் (33), சரவணன் (32), தர்மராஜ் (28) ஆகிய 4 பேர் மதுபானம் தருமாறு டாஸ்மாக் ஊழியர்களிடம் கேட்டு தகராறு செய்தனர். அப்போது கடை மூடப்பட்டதும் 4 பேரும் சேர்ந்து டாஸ்மாக் கடையை சுற்றி அமைக்கப்பட்டிருந்த தகர சீட்டுகளாலான முன்புற கேட் மற்றும் கதவை சேதப்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து டாஸ்மாக் பணியாளர்கள் அளித்த புகாரின்பேரில் போலீசார் ஜெகதீஷ் மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர். தப்பியோடிய சரவணன் மற்றும் தர்மராஜ் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Tasmac ,
× RELATED மறைமலைநகர் அருகே டாஸ்மாக் பாரில்...