×

(தி.மலை) பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டியதை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் வந்தவாசியில் நடந்தது

வந்தவாசி, ஜன.25: தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டியதை கண்டித்து வந்தவாசியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி லாவண்யா தற்கொலைக்கு தூண்டிய பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், மதமாற்றத்தால் நடந்த இந்த தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்யக்கோரியும், தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை கண்டித்தும் வந்தவாசியில் இந்து முன்னணி சார்பில் நேற்று காலை தேரடி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகரச் செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். குருலிங்கம், முத்துசாமி, ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கையை வலியுறுத்தி இந்து முன்னணி ஆறுமுகம் பேசினார். அப்போது அவர்கள் முறையான விசாரணை நடத்தாத தஞ்சை மாவட்ட எஸ்பி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷமிட்டனர். முடிவில் முரளி நன்றி கூறினார்.

Tags : Vandavasi ,
× RELATED தெள்ளார் அருகே நிலத்தகராறில் விவசாயி...