×

நாகையில் இஜிஎஸ் பிள்ளை ஐயா நினைவு நாள்

நாகை, ஜன.24: நாகை இ.ஜி. எஸ்.பிள்ளை கல்வி குழுமத்தின் நிறுவன தலைவரும், கல்வித் தந்தை, நாகையின் பெருமை மற்றும் நாகையின் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்த பண்புமிக்க, மறைந்த தாளாளர் செவாலியே டாக்டர் இ.ஜி.சுப்ரமணியன் பிள்ளை ஐயாவின் 8ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நேற்று கல்லூரி வளாகத்தில் உள்ள அவர் திருவுருவச் சிலைக்கு ஐயாவின் துணைவியார் கல்லூரியின் தலைவர் எஸ்.ஜோதிமணி அம்மாள் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர் கோவிந்தசாமியின் புதல்வர் மணிகண்டன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் மறைந்த தாளாளர் செவாலியே டாக்டர் இ.ஜி.சுப்ரமணியன் பிள்ளை வாழ்க்கையில் செய்த சாதனைகளை நினைவு கூறும் வகையில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ராமபாலன் மற்றும் முனைவர் நடராஜன் பேசினார்.
இவ்நிகழ்வில் கல்லூரியின் செயலர் செவாலியே டாக்டர்.எஸ்.பரமேஸ்வரன், அறக்கட்டளை உறுப்பினர் அருள்பிரகாசம், சங்கர், இயக்குநர் சுமதி பரமேஸ்வரன், கணேஷ், மற்றும் அனைத்து அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் முதன்மை செயல் அலுவலர் முனைவர்.சந்திரசேகர், இயக்குநர் விஜயசுந்தரம், தேர்வு நெறியாளர் முனைவர் சின்னத்துரை முனைவர் செல்வ சந்திரா மற்றும் கல்லூரி முதல்வர்கள், துணை முதல்வர்கள் துறை தலைவர்கள், ஆசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், மாணவர்கள் என அனைவரும் ஐயாவை நினைவு கூர்ந்து வணங்கினர்.

Tags : EGS ,Nagaland ,
× RELATED வடகிழக்கில் 3 மாநிலங்களில்...