×

அம்பையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

அம்பை, ஜன.24: அம்பாசமுத்திரம் உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது, ஆர்ப்பாட்டத்தில் கடந்த 2009ம் ஆண்டு ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தப்போராட்டத்தின் போது ஒழுங்கு நடவடிக்கையாக பணியிட மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களின் மாறுதல்களை ரத்து செய்து, முன்பு அவர்கள் பணியாற்றிய பள்ளிகளிலேயே மீண்டும் பணியமர்த்த வேண்டும், பழைய ஓய்வூதியத்திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், மத்தியஅரசு ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத்தலைவர் ஜான்தாமஸ் அந்தோணி தலைமை வகித்தார். வட்டச்செயலாளர் மகாதேவன், மாவட்ட துணைச்செயலாளர் உஷா மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மாவட்ட தலைவர் மைக்கேல் ஜார்ஜ் கமலேஷ் கோரிக்கை விளக்க உரையாற்றினார். பொருளாளர் புஸ்பா நன்றி கூறினார். இதில் 50க்கும் மேற்பட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Ambai ,
× RELATED நெல்லை மாவட்டத்தில் 3 தாசில்தார்கள் திடீர் மாற்றம்