×

(தி.மலை) இளம் பெண் கடத்தல்? செய்யாறில்

செய்யாறு, ஜன.24: செய்யாறில் இளம் பெண் கடத்தப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செய்யாறு டவுன் பகுதியை சேர்ந்தவர் நெசவுத் தொழிலாளி. இவரது 17 வயது மூத்த மகள், காந்தி சாலையில் உள்ள சூப்பர் மார்கெட்டில் பணி புரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் கடைக்கு வேலைக்கு சென்றார். அன்று இரவு ஆகியும் வீடு திரும்பவில்லையாம். இதனால், அவரது பெற்றோர் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் செய்யாறு காவல் நிலையத்தில் சிறுமி காணாமல் போனதாக புகார் அளித்தனர். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை யாராவது கடத்தி சென்றார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : T.Malai ,
× RELATED (தி.மலை) எருது விடும் விழாவில்...