×

குத்தாலத்தில் கடைகள், உணவகங்களில் திடீர் சோதனை

குத்தாலம், ஜன.22: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் சுகாதாரத்துறை சார்பில் அந்தப் பகுதியில் உள்ள மளிகை கடைகள், பேக்கரி கடைகள், உணவகங்கள், டீக்கடைகள் உள்ளிட்ட இடங்களில் வட்டார மருத்துவ அலுவலர் கோபி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அமிர்தகுமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சந்திரசேகரன், தர்மலிங்கம், முத்துக்குமரன், முருகேசன், பிரித்திவிராஜ், முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சோதனை செய்தனர்.இதில் குத்தாலம் தேர்வு நிலை பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணியன், துப்புரவு மேற்பார்வையாளர் சம்பந்தமூர்த்தி, குத்தாலம் ஏட்டு சுரேந்தர் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் கலந்துகொண்டு காலாவதியான உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள், மளிகை பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர். மேலும் அவர்களுக்கு எச்சரிக்கை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது முகக் கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல குத்தாலம் பகுதியில் பஸ்களில் ஆய்வு செய்து முககவசம் இல்லாமல் பயணம் செய்த பயணிகளுக்கும் அபராதம் விதித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags : Kuthalam ,
× RELATED கோமல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாடி...