சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் சாலைகள், பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை போன்ற வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடந்தது. இதில், சென்னை வெள்ள நீர் மேலாண்மை குழுவின் அறிவுரைகள் மற்றும் மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளை விரிவாக ஆய்வு செய்தார்.