×

முத்துப்பேட்டை அருகே முன்விரோதம் வீடு புகுந்து பெண்ணை தாக்கிய 3 பேர் கைது

முத்துப்பேட்டை, ஜன.21: முத்துப்பேட்டை அருகே முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து பெண்ணை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கீழநம்மங்குறிச்சி கிராமத்தில் பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது. அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த சிவா மற்றும் பக்கிரிசாமி ஆகியோருக்கும் முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பக்கிரிசாமி ஆதரவாளர்கள் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன்கள் காமராஜ்(27), ஜெயன்(26) மற்றும் ராமசாமி மகன் சதீஷ்குமார்(23) ஆகியோர் சிவாவின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த அவரது மனைவி தங்கப்பொன்ன்னிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் தங்கபொன்னு புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், பெண்ணை தாக்கியதாக காமராஜ், ஜெயன், சதீஷ்குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Tags : Muthupet ,
× RELATED கந்தப்பரிச்சான் ஆறு குறுக்கே ₹4.95 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்