×

பேஸ்புக்கில் அவதூறு கருத்து போலீஸ் எஸ்ஐ சஸ்பெண்ட்

சென்னை: பூக்கடை காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியிலிருந்தவர் சேகர். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் அவ்வப்போது கருத்துகளை பகிர்ந்து வந்துள்ளார். அண்மையில் நண்பரின் பதிவு ஒன்றுக்கு பதில் அளித்திருந்த சேகர் தமிழக அரசு குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்டிருந்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை அறிந்த காவல் ஆணையர் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளர் சேகர் தமிழக அரசு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சீருடை பணியாளர்களுக்கான நடத்தை விதிகளை மீறியிருப்பது தெரியவந்தது. அவர் மீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளர் சேகரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டார்.

Tags : SI ,Facebook ,
× RELATED பெண்ணை கர்ப்பமாக்கிய எஸ்ஐ அதிரடி சஸ்பெண்ட்