ேவலூர், ஜன.20: வேலூர் வடக்கு இன்ஸ்பெக்டர் நேற்று பொறுப்பேற்றுக்ெகாண்டார். வேலூர் சரகத்துக்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் பாகாயம் காவல்நிலையத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் ஆரணியில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் முத்துகுமார் வேலூர் வடக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டராக ேநற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு சக போலீசார் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.