ஒட்டன்சத்திரம், ஜன.20: ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட அணைப்பட்டி மற்றும் 3வது வார்டு பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் சிறு பாலம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. திமுக நகர செயலாளர் வெள்ளைச்சாமி தொடங்கி வைத்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன், கொத்தயம் வேலுச்சாமி, நிர்வாகிகள் தங்கத்துரை, அம்சவள்ளி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.