×

மணமேல்குடி அருகே தடையை மீறி ரேக்ளா ரேஸ் 10 பேர் மீது வழக்குப்பதிவு

புதுக்கோட்டை, ஜன.20: மணமேல்குடி அருகே தடையை மீறி ரேக்ளா ரேஸ் நடத்தியதாக 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.அறந்தாங்கியை அடுத்த திருவாப்பாடியில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாட்டுவண்டி ரேக்ளா ரேஸ் நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக ரேக்ளா ரேஸ் நடத்த காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. மேலும் பொதுமக்கள் அதிக அளவில் கூட தடை உள்ளது.

இந்நிலையில் திருவாப்பாடியில் கடந்த 17ம் தேதி தடையை மீறி ரேக்ளா ரேஸ் நடைபெற்றது. இச்சம்பவம் குறித்து மணமேல்குடி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமுகமது தடையை மீறி திருவாப்பாடியில் ரேக்ளா ரேஸ் நடத்தியதாக சிவாஜி, காளிமுத்து, கருப்பையா, சிவானந்தம், மலையரசன், செல்வராஜ், அப்புராஜா, தனபால், ராமசாமி, அமர்த்தியாசென் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Ragla ,Race ,Manamelkudi ,
× RELATED பழைய அரசாணைப்படி ரேக்ளா ரேஸ்: ஐகோர்ட் அனுமதி