×

ஒரத்தநாடு அருகே திருமணமாகாததால் விரக்தி தொழிலாளி தீக்குளித்து சாவு

ஒரத்தநாடு, ஜன.20: ஒரத்தநாடு அருகே உள்ள புதூர் வடக்கு தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் வீரபாபு(27). திருமணமாகவில்லை. நஇநிலையில் ஒரத்தநாட்டில் உள்ள தனியார் முடி திருத்தும் கடையில் வேலை செய்து வந்தார். இவர் தனக்கு திருமணம் ஆகவில்லையே என்ற விரக்தியில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மதுகுடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான வீரபாபு நேற்று மதியம் வழக்கம்போல் தனது வீட்டில் உள்பக்கமாக கதவை தாழிட்டு தூங்கியுள்ளார். இந்நிலையில் மதியம் 3 மணி அளவில் வீட்டில் இருந்து கரும்புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீரபாபு உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதுதொடர்பாக அக்கம் பக்கத்தினர் ஒரத்தநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் 27 வயதாகியும் திருமணமாகாமல் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Orathanadu ,
× RELATED ஒரத்தநாட்டில் தீ தொண்டு நாள், வார...