கும்பகோணம், ஜன.20: கும்பகோணம் அருகே சத்தியமங்கலம் ஊராட்சியில் கால்நடைகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாமில் 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா சத்தியமங்கலம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை மருத்துவம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. எம்எல்ஏ ஜவாஹிருல்லா கலந்துகொண்டு கால்நடைகளுக்கான மருத்துவமுகாமை தொடங்கி வைத்து சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.