×

மஞ்சூரில் பஸ்கள் நிறுத்தம்

பரமக்குடி, ஜன.19: பரமக்குடி அருகே மஞ்சூர் மிகவும் வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. செங்கல் சூளைகள்,மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையம், விவசாயம் சார்ந்த தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலையாக இருந்த பொழுது அனைத்து பேருந்துகளும் மஞ்சூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று சென்றது. இந்தநிலையில், நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டதும் நகர் பேருந்துகள் மட்டுமே நின்று செல்கிறது. இதனால், வியாபாரிகள் பொதுமக்கள்,அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். இது தொடர்பாக மஞ்சூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமையிலான பொதுமக்கள் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்எல்ஏக்கள் முத்துராமலிங்கம், முருகேசன் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். கோரிக்கைகளை ஏற்று நேற்று முதல் அனைத்து பேருந்துகளும் மஞ்சூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்வதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.  இதனை தொடர்ந்து அனைத்து பேருந்துகளிலும் மஞ்சூர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இயக்கப்பட்டது. இதற்காக இந்த பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் அமைச்சர், போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Tags : Manzoor ,
× RELATED மஞ்சூர் பகுதியில் பூத்து குலுங்கும்...