×

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 5 பேர் மீது வழக்குப்பதிவு

திருப்புத்தூ: திருப்புத்தூர் அருகே சுண்ணாம்யிருப்பு கிராமத்தில் பிள்ளையார் கோயில் அருகில் நேற்று முன்தினம் பல்வேறு கிராமங்கள் மற்றும் ஊர்களில் இருந்து அலங்கரித்து கொண்டுவரப்பட்ட 100க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகளை ஆங்காங்கே கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டது. இதை ஏராளமான மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் காளைகளை பிடித்தனர். இதில் மாடுகளை பிடித்த இளைஞர்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்த மஞ்சு விரட்டை காண சுற்றிவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர். இந்நிலையில் அரசு அனுமதியின்றியும், கொரோனா தொற்று நோய் தடுப்பு ஊரடங்கு விதிமுறைகளை மீறி மஞ்சுவிரட்டு நடத்தியதாக சுண்ணாம்யிருப்பு விஏஓ ஜோதி கொடுத்த புகாரின் பேரில், சுண்ணாம்யிருப்பைச் சேர்ந்த மகேந்திரன்(43), ஈஸ்வரன்(50), தினேஷ்(27, அம்பலத்தரசு(20), பெரியகருப்பன்(70) ஆகிய 5 பேரும் மீதும் திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு