×

பழநி பகுதியில் 100 கிலோ குட்கா பறிமுதல்

பழநி: பழநி புறநகரில் உள்ள சண்முகநதி, வண்டிவாய்க்கால் பகுதிகளில் உள்ள கடைகளில் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து பழநி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று அப்பகுதியில் உள்ள 15க்கும் மேற்பட்ட கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் 100 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. தவிர, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 30 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன.

Tags : Palani ,
× RELATED பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாஜ மாவட்ட செயலாளர் கைது