×

மயிலாடுதுறை 5 ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

மயிலாடுதுறை ஜன.12: மயிலாடுதுறை மாவட்டம மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், கொள்ளிடம், செம்பனார்கோவில் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் 600க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுக்கு மேலாக நிலுவையில் உள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் அவர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தோடு கடந்த அதிமுக ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்ட தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்யவேண்டும், மேலும் வரையறுக்கப்பட்ட அடிப்படை ஊதியம் பெற்று வரும் கிராம ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிர்வாக நிதியினை காலதாமதமின்றி வட்டாரங்களுக்கு உடனே விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொள்ளிடம்: கொள்ளிடம் ஊராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,பணி மேற்பார்வையாளர்கள் ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் 42 ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட 83 பேர் வேற்று பணிக்கு வராமல் ஒரு நாள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற வேண்டிய அனைத்து பணிகளும் நடைபெறவில்லை. இதேபோல் கொள்ளிடம் ஒன்றியத்தை சேர்ந்த 42 ஊராட்சிகளிலும் உள்ள ஊராட்சி செயலாளர்கள் ஒரு நாள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அனைத்து ஊராட்சி பணிகளும் நடைபெறவில்லை. 100 நாள் வேலை பணியாளர்களும் நேற்று வேலைக்கு செல்லவில்லை.

Tags : Mayiladuthurai ,Panchayat Union ,
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...