×

பொங்கல் பரிசு தொகுப்பில் பொருட்கள் அனைத்தும் இருக்கிறதா...ஆண்டிபட்டியில் மகாராஜன் எம்எல்ஏ ஆய்வு

ஆண்டிபட்டி:  தமிழகத்தில் தைப்பொங்கலையொட்டி வெல்லம், பச்சரிசி, ரவை, கோதுமை, சீரகம், மிளகு, பாசிப்பருப்பு, முந்திரி, ஏலக்காய் மற்றும் கரும்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு, அரிசி கார்டுதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக எல்லாப் பொருள்களும் தடையின்றி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, ஆண்டிபட்டி மற்றும் சக்கம்பட்டி பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் பரிசு தொகுப்பில் முழுமையாக உள்ளதா, அதனுடைய அளவு முழுமையாக உள்ளதா என எம்.எல்.ஏ மகாராஜன் நேற்று ஆய்வு செய்தார்.

மேலும் பொங்கல் தொகுப்பில் அனைத்து பொருட்களும் உள்ளதா என பொதுமக்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவரது ஆண்டிபட்டி பகுதியில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேசன் கடையில் பொங்கல் பரிசில் இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஆண்டிபட்டி தாசில்தார் திருமுருகன், வட்ட வழங்கல் அலுவலர் சதீஸ் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும், அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Tags : Pongal ,Maharajan ,MLA ,Andipatti ,
× RELATED நயினார் நாகேந்திரன் ₹1,500 கோடி ெசாத்து...