×

மல்லியகரை அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை: போலீசார் விசாரணை

ஆத்தூர்: ஆத்தூர், மல்லியகரை அருகே கோபாலபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. விஷேச நாட்கள் மற்றும் இதர நாட்களில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை கோயிலை திறக்க பூசாரி வந்தார். அப்போது கோயிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்னே சென்று பார்த்த போது, உண்டியல் பெயர்த்து எடுக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து பொதுமக்களுக்கு பூசாரி தகவல் தெரிவித்தார். திரண்டு வந்த மக்கள் இது குறித்து மல்லியக்கரை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதன் பேரில் விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கோயில் அருகே உள்ள புதர் ஒன்றில் உடைக்கப்பட்ட உண்டியல் கிடந்தது. அருகில் சென்று பார்த்த போது உண்டியலை உடைத்து அதிலிருந்த பக்தர்கள் காணிக்கை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. உண்டியலில் சுமார் 50 ஆயிரம் பணம் இருக்கலாம் என பக்தர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து மல்லியக்கரை போலீசார் கொள்ளை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Robbery ,Malliyagarai ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...