×

கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் ஐடி நிறுத்தம் இணையதள சேவை மையங்களுக்கு தர்மபுரி கலெக்டர் எச்சரிக்கை

தர்மபுரி, ஜன.9:  தர்மபுரி மாவட்டத்தில், அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்தால், தனியார் இணையதள சேவை மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஐடி நிறுத்தம் செய்யப்படும் என்று கலெக்டர் திவ்யதர்சினி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தர்மபுரி மாவட்டத்தில் உரிய ஆவணங்களுடன் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், தொலைபேசி எண் மாற்றம், ஆதார் எண் சேர்த்தல், நகல் அட்டை கோருதல் போன்ற பணிகளுக்கு இணையத்தில் பதிவு செய்ய பொதுமக்கள் நலன் கருதி(www.tnpds.gov.in) இலவசமாக இயங்கி வருகிறது. பொதுமக்கள் யாருடைய உதவியுமின்றி, தங்களுடைய கைப்பேசி வாயிலாகவும் பதிவேற்றம் செய்யலாம். அவ்வாறு பதிவேற்றம் செய்தவர்கள் ஏதேனும் தகவல் தேவை என்றால், அனைத்து பணிகளுக்கும் பொறுப்பான தங்கள் வட்டத்திற்குட்பட்ட வட்ட வழங்கல் அலுவலரை தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். மாறாக இடைத்தரகர்கள், மூன்றாம் நபர்கள் யாரையும் தொடர்புகொள்ளத் தேவையில்லை. இடைத்தரகர்கள், 3ம் நபர்கள் தங்களின் கோரிக்கை குறித்து அலுவலர்களை தனக்கு தெரியும். பணிகளை நான் முடித்து தருகின்றேன் என்று கூறுபவரின் விபரங்கள் குறித்த தகவல்களை மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 1077 -04342 233299 மற்றும் 94450 45610ல் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

புகார் தெரிவிக்க வட்ட வழங்கல் அலுவலர்களின் செல்போன் எண்கள் விபரம்: தர்மபுரி 9445-000217, பென்னாகரம் 94450-00218, பாலக்கோடு 94450-00219, அரூர் 94450-00220, பாப்பிரெட்டிப்பட்டி 94450-00221, காரிமங்கலம் 94457-96431 மற்றும் நல்லம்பள்ளி 94457-9643 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம். மேலும், முதல்வர் சட்டமன்றத்தில் 15 நாட்களில் புதிய மின்னனு குடும்ப அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், தர்மபுரி மாவட்டத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தவர்களுக்கு 5 நாட்களுக்குள் ஒப்புதல் அளிக்கப்பட்டு குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இடைத்தரகர்கள், மூன்றாம் நபர்கள் யாரேனும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தால் அவர்களின் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களிடம் தனியார் இணையதள சேவை மையங்களில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்தால், தனியார் இணையதள சேவை மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள \”ஐடி” நிறுத்தம் செய்யப்படும். சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது மேல் நடவடிக்கை தொடரப்படும் என்றார்.

Tags : Darmapuri ,
× RELATED தர்மபுரி அருகே பரபரப்பு கோவை நகைக்கடை...