கோவில்பட்டி, ஜன. 9: தற்காலிக பெண் ஊழியருக்கு கொரோனா பரவியதை அடுத்து கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் நேற்று 46 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மேலும் மூவருக்கு தொற்று உறுதியானது. கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பிரிவில் வேலை பார்க்கும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவர், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், பாலசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 46 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. டாக்டர் மனோஜ் தலைமையிலான குழுவினர் யூனியன் அலுவலகத்திற்கு வருகை தந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதியானது.