×

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் தேரியூர் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை

உடன்குடி, ஜன. 9: உடன்குடி பள்ளியில் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு நிரந்தரத்தீர்வு காணக்கோரி  அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணனை பள்ளி ஆசிரியர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.உடன்குடி தேரியூர்  ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் நிலவும் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண கோரி பள்ளி ஆசிரியர்கள் உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தலைமையில் செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன் முன்னிலையில் தண்டுபத்து அலுவலகத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து மனுக்கள் அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர், ஆசிரியர்களிடம் பிரச்னைகள் குறித்த முழு விவரத்தை கேட்டறிந்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்துபேசி உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.  அப்போது உடன்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன்சங்கத்தலைவர் அஸ்ஸாப் கல்லாசி, வர்த்தக அணி மாவட்ட  துணை அமைப்பாளர் இளங்கோ உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags : Theriyur ,Minister ,Anita Radhakrishnan ,
× RELATED பாஜக நிர்வாகிகளை விரட்டியடித்த குளச்சல் மீனவர்கள்