×

டிஎஸ்பி விசாரணை நாகை, திருக்குவளை

அரசு ஐடிஐ.ல் சேர 15ம் தேதி வரை நீட்டிப்பு
நாகை, ஜன.9: நாகை மாவட்டத்தில் உள்ள நாகை மற்றும் திருக்குவளை அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர வரும் 15ம் தேதி வரை காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளது.நாகை மாவட்டத்தில் உள்ள நாகை மற்றும் திருக்குவளை அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இதில் நாகை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் (பற்றவைப்பவர், தச்சர், அச்சுவார்ப்பவர், கடைசலர்) மற்றும் திருக்குவளை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் (பற்றவைப்பவர், பொருத்துநர்) போன்ற தொழில் பிரிவுகளில் சேர விரும்புவோர் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் கார்டு அசல் மற்றும் நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வரும் 15ம் தேதி நேரடியாக உரிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் சென்று பயிற்சியில் சேரலாம். கூடுதல் தகவல் அறிய 04365-250129 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்


Tags : Naga ,
× RELATED காதல் ரகசியத்தை உடைத்த நாக சைதன்யா, சோபிதா