×

திருமானூரிலிருந்து அரியலூர், தஞ்சைக்கு மீண்டும் பேருந்து இயக்க வேண்டும்

அரியலூர்,ஜன.9: திருமானூரிலிருந்து அரியலூர் மற்றும் தஞ்சாவூருக்கு காலை நேரத்தில் இயக்கப்பட்டு, கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருமானூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அரியலூர் மாவட்டம் திருமானூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் பரிசுத்தம் தலைமை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர் பன்னீர்செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கரும்பாயிரம், சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 கட்சியின் வளர்ச்சி, செயல்பாடு குறித்து ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் பேசிளார். கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வரும் 16ம்தேதி முதல் பிப்ரவரி 1 ம் தேதிக்குள் அனைத்து கிளைகளிலும் கிளை மாநாடு நடத்துவது. பிப்ரவரி 9, 10 ஆகிய தேதிகளில் ஒன்றிய மாநாடு நடத்துவது. திருமானூரிலிருந்து, காலை 8.30 மணிக்கு அரியலூருக்கும், தஞ்சாவூருக்கும் இயங்கி வந்த அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டதை மீண்டும் இயக்க வேண்டும். திருமானூர்,கோவிலூர் மற்றும் விழுப்பணங்குறிச்சி ஆகிய கிராமங்களில் குடிநீர் உப்பாக மாறியுள்ளதால் சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Thirumanur ,Ariyalur ,Tanjore ,
× RELATED திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி