×

பெரம்பலூர் மாவட்டத்தில் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு

பெரம்பலூர்,ஜன.9: பெரம்பலூர் மாவட்டத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் உட்பட அனைத்து குறை தீர்க்கும் நாள் கூட்டங்களும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகின்றன என கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில்,தமிழகஅரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது, தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கருத்தில் கொண்டு, பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் மாவட்ட கலெக்டர் கலெக்டர் தலைமையில் நடைபெறும் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகின்றன. மேலும், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் உட்பட அனைத்து குறை தீர்க்கும் நாள் கூட்டங்களும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகின்றன.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Perambalur district ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்