×

சிட் பண்ட் நடத்தி பல கோடி மோசடி? காவல் நிலையத்தில் புகார் அளிக்க குவிந்த கிராமமக்கள்

திருச்சுழி, ஜன. 8: திருச்சுழி அருகே தமிழ்பாடி கிராமத்தை சேர்ந்த ஒருவர் தமிழ்பாடி மட்டுமின்றி சுற்றியுள்ள சாமிநத்தம், சித்தலக்குண்டு, ஒத்தவீடு, கீழக்குருணை குளம், ராமசாமிபட்டி, டி.கரிசல்குளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சிறுசேமிப்பு சீட்டு திட்டத்தை சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக அவர் வீட்டில் இல்லாமல் வெளியூர் சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் சிறுசேமிப்பு பணம் கட்டியவர்கள் பணத்தை திருப்பி கேட்க சென்ற போதெல்லாம் அவர் வீட்டில் இல்லாததால் தலைமறைவாகி விட்டதாக பேசியதாக தெரிகிறது. இதனால் அச்சமடைந்த சுற்றியுள்ள கிராமமக்கள் அவரது வீட்டிற்கு முன்பு தினமும் பணம் கேட்டு குவிந்ததாக கூறப்படுகிறது. அப்போதெல்லாம் அவரது குடும்பத்தினர் சரியான பதில் கூறவில்லை என தெரிகிறது. இதனால் சிட் பண்ட் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவாகி விட்டதாக கூறி நேற்று 100க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் அளிக்க குவிந்தனர். பின்னர் போலீசார், இதுகுறித்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்யுங்கள் என கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Sid Bund ,
× RELATED திருச்சி மாவட்டத்தில் 13 மையங்களில் 8,283...