×

விருதுநகரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், ஜன. 8: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பாக நேற்று டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க மாநில துணை பொது செயலாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம், குறைந்த பட்ச ஊதிய நிர்ணயம், எட்டு மணிநேர வேலை, வார விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் குணசேகரன், ராஜபாண்டி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Tasmac ,Virudhunagar ,
× RELATED டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கைதான நான்கு வாலிபர்களுக்கு சிறை